Saturday 4th of May 2024 10:39:40 AM GMT

LANGUAGE - TAMIL
யோஷிரோ மோரி
ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் 2021 ஜூலை  நடைபெறும்!

ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் 2021 ஜூலை நடைபெறும்!


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற்ற வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு எப்போது ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் நடத்திய ஆலோசனையில் அமைப்பு குழு தலைவர் யோஷிரோ மோரி மற்றும் ரோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்க் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வெப்பம் குறைவாக உள்ள நேரத்தில்தான் மரதன் உள்ளிட்ட போட்டிகைள நடத்த முடியும் என்று கவர்னர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE